தமிழகத்தில் உள்ள சூரியசக்தி மின் நிலையங்களில், முதல் முறையாக, 2,200 மெகா வாட்டிற்கு மேல், மின்சாரம் உற்பத்தியாகி உள்ளது.
ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் உள்ளிட்ட தென் மாவட்டங்களில், தனியார் நிறுவனங்கள், 2,724 மெகா வாட் திறனில், சூரியசக்தி மின் நிலையங்கள் அமைத்துள்ளன. இவற்றில் உற்பத்தியாகும் மின்சாரத்தை, தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் நிர்ணயித்துள்ள விலைக்கு, மின் வாரியம் கொள்முதல் செய்கிறது.மற்ற மாநிலங்களை விட, தமிழகத்தில், ஆண்டுக்கு, 300 நாட்களுக்கு மேல் சூரியசக்தி மின்சாரம் கிடைக்கும் சாதகமான சூழல் நிலவுகிறது.
இதனால், முதலீட்டாளர்கள் பலரும், முதலீடு செய்ய ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால், மின் வாரியம், குறித்த காலத்தில் பணம் தராதது உள்ளிட்ட காரணங்களால், அவர்கள் அதிருப்தியில் உள்ளனர்.சூரியசக்தி மின் நிலையங்களில் இருந்து, தினமும் சராசரியாக, 1,500 - 1,800 மெகா வாட் மின்சாரம் கிடைக்கிறது. இந்த கோடையில், எப்போதும் இல்லாத அளவுக்கு, வெயில் சுட்டெரித்து வந்தது.
இதனால், சூரியசக்தி மின் நிலையங்களில், மே, 11ல், 2,172 மெகா வாட் மின்சாரம் உற்பத்தியானது; இதுவே, உச்ச அளவாக இருந்தது.இந்நிலையில், கடந்தமாதம், 29ம் தேதி, சூரியசக்தி மின் நிலையங்களில் இருந்து, முதல் முறையாக, 2,202 மெகா வாட் மின்சாரம் உற்பத்தியாகி, புதிய உச்சத்தை எட்டியுள்ளது
ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் உள்ளிட்ட தென் மாவட்டங்களில், தனியார் நிறுவனங்கள், 2,724 மெகா வாட் திறனில், சூரியசக்தி மின் நிலையங்கள் அமைத்துள்ளன. இவற்றில் உற்பத்தியாகும் மின்சாரத்தை, தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் நிர்ணயித்துள்ள விலைக்கு, மின் வாரியம் கொள்முதல் செய்கிறது.மற்ற மாநிலங்களை விட, தமிழகத்தில், ஆண்டுக்கு, 300 நாட்களுக்கு மேல் சூரியசக்தி மின்சாரம் கிடைக்கும் சாதகமான சூழல் நிலவுகிறது.
இதனால், முதலீட்டாளர்கள் பலரும், முதலீடு செய்ய ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால், மின் வாரியம், குறித்த காலத்தில் பணம் தராதது உள்ளிட்ட காரணங்களால், அவர்கள் அதிருப்தியில் உள்ளனர்.சூரியசக்தி மின் நிலையங்களில் இருந்து, தினமும் சராசரியாக, 1,500 - 1,800 மெகா வாட் மின்சாரம் கிடைக்கிறது. இந்த கோடையில், எப்போதும் இல்லாத அளவுக்கு, வெயில் சுட்டெரித்து வந்தது.
இதனால், சூரியசக்தி மின் நிலையங்களில், மே, 11ல், 2,172 மெகா வாட் மின்சாரம் உற்பத்தியானது; இதுவே, உச்ச அளவாக இருந்தது.இந்நிலையில், கடந்தமாதம், 29ம் தேதி, சூரியசக்தி மின் நிலையங்களில் இருந்து, முதல் முறையாக, 2,202 மெகா வாட் மின்சாரம் உற்பத்தியாகி, புதிய உச்சத்தை எட்டியுள்ளது
No comments:
Post a Comment