
புதுடில்லி: உள்ளாட்சி தேர்தலை இன்னும் நடத்தாமல் உள்ளது ஏன் என தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது.
இதற்கு பதிலளித்த தமிழக அரசு, மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தொகுதி மறுவரையறை செய்யும் பணி காரணமாக உள்ளாட்சி தேர்தலை நடத்தவில்லை என விளக்கமளித்தது.
உள்ளாட்சி தேர்தல் நடத்துவது தொடர்பான வழக்கை விசாரித்த கோர்ட், தேர்தல் நடத்துவது தொடர்பான இறுதிப்பணிகளை எப்போது செய்வீர்கள், எப்போது தேர்தலை நடத்துவீர்கள் என்பது குறித்து 2 வாரத்தில் பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது.
No comments:
Post a Comment